Thursday 2nd of May 2024 09:42:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
நுவரெலியாவில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம்!

நுவரெலியாவில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம்!


பாதசாரிகள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதையடுத்து நுவரெலியாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நுவரெலியா, வெலிமடை பகுதியில் காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் வீதியால் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

அதிவேகத்துடன் காரை செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை குறைக்கும் வீதி தடை(பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே குறித்த பகுதியில் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுவரெலிய, வெலிமடை வீதியில் ஹக்கலை பூந்தோட்டம் அருகில் பொதுமக்கள் வீதி மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE